Friday, July 17, 2009

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (Namakkal Kavignar V. Ramalingam Pillai )

“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திய பாடல்களைப் பாடிய நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். ‘வந்தே மாதரம்’ பாடலின் மூலம் தமது இளமையிலேயே சுதந்திர உணர்வைத் தூண்டப்பெற்றவர். முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் காந்திஜியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்மை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரஸின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்திமிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரக்ப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘அரசவைக் கவிஞர்’ பட்டமும் `பத்மபுக்ஷன்’ பட்டமும் பெற்றவர்.

‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லாமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடி கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கத்தியின்றி ரத்தமின்றி
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும்யாரும் சேருவீர் (கத்)

ஒண்டி அண்டிக் குண்டுவிட்டு
உயிர்பறித்த லின்றியே
மண்டலத்தில் கண்டிலாத சண்டை
யொன்று புதுமையே (கத்)

குதிரையில்லை யானையில்லை
கொல்லும் ஆசையில்லையே
எதிரியென்று யாருமில்லை
ஏற்றும் ஆசையில்லதாய் (கத்)

கோபமில்லை தாபமில்லை
சாபங்கூறல் இல்லையே
பாபமான செய்கை யொன்றும்
பண்ணுமாசை யின்fறியே (கத்)...

தமிழன் என்றொரு இனமுண்டு
தமிழன் என்றொரு இனமுண்டு
தனயே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்
அறிவின் கடலைக் கடைந்தவனாம்
அமிர்தம் திருக்குறள் அடைந்தவனர்
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்
கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்
கம்பன் பாட்ரெனப் பெயர்கொடத்தான்
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
புண்ணிய முறையில் நுகர்த்திடுவான்
பத்தினி சாபம் பலித்துவிடும்
பாரில் இம்மொழி ஒலித்திடவே
சித்திரச் சிலப்பதிகாரமதை
செய்தவன் துறவுடை ஓரரசன்.
சிந்தா மணிமணி மேகலையும்
பத்துப் பாட்டெனும் சேகரமும்
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
நாகரி கத்தினை மிகக்காட்டும்.
தேவா ரம்திரு வாசகமும்
திகழும் சேக்கி ழார்புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
உரைகளும்f தமிழன் வாழ்வாகும்.
தாயும் ஆனவர் சொன்னதெலாம்
தமிழன் ஞானம் இன்னதெனும்
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
பாடலும் தமிழன் பெட்பெனலாம்.
உத்தமன் காந்தியின் அருமைகளை
உணர்ந்தவன் தமிழன் பெருமையுடன்
சத்தியப்போரில் கடனிருந்தான்
சாந்தம் தவ$ துடனிருந்தான்

No comments:

Post a Comment